இது பட்டுக்கோட்டையிலிருந்து ,அலிவளம் , அறந்தாங்கிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் உ ள்ள திருச்சிற்றம்பலம் என்னும் ஊராகும். இக்கோயிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் இவ்வூரைச் சிற்றேமம் என்றே குறிப்பிடுகின்றன.


இறைவர் திருப்பெயர் - சிற்றேமமுடையமகாதேவர். இறைவியின் திருப்பெயர் - மானார்விழிநன்மாது. இப்பெயர் இவ்வூர்ப்பதிகத்தில் ``திருவாருஞ்சிற்றேமத்தான் `மானார்விழி நன்மாதொடும்` மகிழ்ந்தமைந்தனல்லானே`` எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது.